Wednesday 7 August 2013

டெல்லியில் ‘ஸ்டூடண்ட் விசா’வில் வந்து விபச்சாரம்


டெல்லி: டெல்லியில், ஸ்டூடண்ட் விசாவில் மாணவிகள் போர்வையில் வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பெண்களுக்கு பொதுவாகவே பாலியல் தொழிலில் மவுசு அதிகமாம். அதிலும் இளம்பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாமாம். எனவே, இதை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் பாரின் கால்கேர்ஸ், ஸ்டூடண் விசாவில் மாணவிகள் போல் இந்தியாவிற்குள் நுழைந்து விபச்சாரம் செய்வது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, பார்முலா 1 ரேஸ் மற்றும் ஐபிஎல் காலங்களில் இவர்களது காட்டில் மழைதானாம்.
சில பாலியல் புரோக்கர்கள் இவர்களை கிட்டத்தட்ட 15 நாட்களுக்குக் கூட மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்களாம்.
அப்பெண்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் குறித்த செலவுகள் அனைத்தும் புரோக்கர்கள் பொறுப்பாகும்.
இத்தகைய வெள்ளைத் தோல் அழகிகளைக் காட்டி, வாடிக்கையாளர்களிடம் ரூ25000 முதல் ஒரு லட்சம் வரை கறந்து விடுகிறார்களாம் தரகர்கள்.
வெளிநாட்டிற்கும், இந்தியாவிற்குமாக பறந்து, பறந்து பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண்களுக்கு சுலபமாக மாதம் ரூ 20லட்சம் வரை சம்பளம் கிடைத்து விடுகிறதாம்.

No comments:

Post a Comment